தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

January 5, 2015

சடங்குகளில் சண்டை நிகழ்கிறதா? சண்டை போடுவதற்கென்றே சடங்குகள் நிகழ்த்தப்படுகிறதா?

                           சிறிய குழந்தைகள் அதன் வாழ்க்கையில் எல்லா உயிரினங்களுக்கும் ஏற்படும் மாற்றம் போல மனித குலத்திலும் மாற்றம் ஏற்படுகின்றது.ஆனால் அந்த உயிரினங்களுக்கு கிடைக்கின்ற சுதந்திரம் இந்த சடங்கு வீடுகளில் கிடைப்பதில்லை .ஒரு பட்டாம்பூச்சி வளர்ந்து பெரிய பட்டாம்பூச்சியாக மாறி சிறகடித்து பறக்கிறது.ஆனால் மனிதன் மட்டும் தான் "நீ பெரிய மனுஷி ஆகி விட்டாய் "என்று கூறியே அந்த பெண்ணை முடக்கி விடுகிறான். இதை ஒரு விழாவாக மாற்றி உறவுகளில் ஏற்படுகின்ற விரிசல் இருக்கிறதே சொல்ல இயலாதது .
                                            உதாரணத்திற்கு ஒரு சடங்கு வீடு அங்கு ஒயிலாட்டம்,காது கிழிய பட்டாசு,போட்டாக்காரனுக்கு 8000 ரூபாய் இதெல்லாம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க ஒரு புறம்
எந்த பக்கத்திற்குரிய மாமன் பெண்ணிற்கு மாலை இடுவது எனத் தகராறு .இவ்வளவு செலவு செய்து  மிஞ்சியது என்னவோ கண்ணீர்தான்.
                                                மற்றொரு சடங்கு வீட்டில் பட்டு சேலை ,பாத்திரம் பண்டம் என எடுத்து வர எந்த அத்தைக்காரி பெண்ணிற்கு தண்ணீர் ஊற்றுவது என்ற சண்டையில் தொடங்கி  அவர்கள் தண்ணீர் ஊற்றி விட்டு போக இவர்கள் வீட்டில் மன உளைச்சலால் தலைவன் மனதில் விபரீத முடிவு
தோன்றுகிறது .
                                               ஆனால் இரண்டு சடங்கு வீடுகளிலும் பணம் சம்பாதிப்பவர்கள் இவர்களை ஆதயமாக வைத்து பணம் தேடிக் கொண்டனர்.இவர்களோ ஒரு மூலையில் கடன் தொல்லையிலும்
மற்றொரு மூலையில் சண்டைச் சச்சரவுகளால் மனம் நொடிந்து போகின்றனர்.
                                              இவர்களை ஒரு சம்பிரதாய முறையைச் சொல்லி தீட்டு அகற்ற வேண்டும் எனக் கூறி   இருந்த இடத்தில் 6000 ரூபாய் சம்பாதித்து விட்டு செல்கின்றார்கள் சிலர்.அதற்கு ஆடம்பரம் காட்ட வேண்டும் என்ற ஆசையைத் தூண்டி ,யாருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற சண்டையில் முடிகிறது.
                                              அதை நம்பி நமது உறவுகளும் பிளவு படுகின்றன .
சடங்குகளில் சண்டை நிகழ்வதில்லை ,பல இடங்களில் சண்டை போடுவதற்கென்றே சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன.

2 comments:

  1. வருக! வாழ்க! வளர்க!

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி ஐயா

      Delete

வணக்கம்

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out