தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

February 22, 2015

குலசாமி -2

 நீங்கள் கவனித்ததுண்டா திருவிழாக்கள் என்ற பெயரில் நாம் செய்யும் மூட நம்பிக்கைகளை என்றுமே ஆரியர்கள் செய்ததில்லை அவர்கள் மொட்டை அடித்ததுண்டா,தலையில் தேங்காய் உடைத்ததுண்டா,நாக்கில் அழகு குத்தியதுண்டா,சிவ ராத்திரிக்கு மது அருந்தியதுண்டா,தீபாவளி அன்று மருந்து சாப்பிடாமல் இனிப்பு உண்டதுண்டா?நீங்கள் நன்றாக கவனித்தீர்கள் என்றால் தெரியும் அவர்கள் இருக்கும் இடங்களில் டாஸ்மார்க் கடை இருக்காது.நாம் அன்றாட கூலித் தொழிலாளிகள் இருக்கும் இடங்களில் மெயின் ரோட்டில் மூன்று கடைகள் வைக்கப் பட்டிருக்கும்.திருவிழா பண்டிகை என்ற பெயரால் மது அருந்திவிட்டு இறப்பவர்களை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.ஜல்லிக்கட்டு என்ற பெயரில் அரசியல் நடக்கிறது அது நம் வீர விளையாட்டுத்தான் நான் இல்லை என்று கூறவில்லை இன்று தமிழ் நாட்டில்
நானும் தமிழன்தான் என்று சொல்லும் ஆரியர்களைப் பார்த்துக் கேட்கிறேன் .நீங்கள் என்றாவது ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டதுண்டா?
தமிழர்கள் நீங்கள்(ஆரியர்கள்) செய்யும் வேலைகள்(சடங்கு சம்பிரதாயங்கள்) இல்லாமல் வாழ்ந்து விடலாம்  உதாரணமாக  நாத்திகர்களை எடுத்துக் கொள்வோம்.
ஆனால் ஒரு நாள் நீங்கள் வரணாசரம அடிப்படையில் பிரித்த தமிழர்கள் தங்கள் அன்றாட பணிகளை செய்யாவிட்டால் உங்கள் பிழைப்பு நடக்காது.யாரவது ஒரு ஆரியர்  களை எடுத்ததுண்டா? துணி துவைத்ததுண்டா?செருப்பு தைத்ததுண்டா? 
இதையெல்லாம் அவர்கள் செய்ய மாட்டார்கள் நம்மை விட அவர்களுக்கு நன்றாக தெரியும் கடவுள்,சாதி,மதம்,மூட நம்பிக்கைகள்,சோதிடம்,சனிப் பெயர்ச்சி போன்றவைகள்
இல்லை அவை நம்மால்(ஆரியர்களால்) உருவாக்கப் பட்டவை என்று.மற்றொன்று ஆரியர்களால் ஒரு காரியம் முடியவில்லை எனில் அதை தன்னுடைமையாக்கிக் கொள்ளப்பார்ப்பார்கள்.திருக்குறளை ஒன்றும் செய்யமுடியவில்லை என்றும் தெரிந்ததும் 
திருவள்ளுவர்க்கு தினம் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் சிலவற்றை செய்பவர்களைப் பார்த்து நான் கேட்கிறேன் .திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க இயலுமா?

குலசாமி-1

                                                ஒருவன் என்னிடம் வந்து உன் குலசாமி பெயர் என்ன தெரியுமா? என்று என்னிடம் கேட்டான்.நான் தெரியாது என்று கூறினேன்.அதற்கு அவன் தமிழரின் பண்பாடு அழிந்து கொண்டே வருகிறது என்றான்.நான் கூறினேன் தமிழரின் பண்பாடு என்றால் என்ன தெரியுமா?என்றேன் நீ கூறு என்றான்.மானமும் அறிவும் என்றேன்.மேலும் வீரத்தையும் ,காதலையும் இரு கண்களாகப் போற்றியவன் தமிழன்.தமிழனுக்கு என்றுமே நேருக்கு நேராகப் போரிட்டுத்தான் பழக்கம்.அப்போது மற்றொரு நண்பன் என்னிடம் வந்து உனக்கு மகாபாரதம் கதைப் பற்றி தெரியுமா?என்றான் சொல் என்றேன்.ஒருவனுக்கு வெற்றி என்பது குறுக்கு வழியில் தான் கிடைக்கிறது வீரம் என்பது அவன் நேருக்கு நேர் போரிட்டு வெல்வது என்றான்.
                                             நான் அவனிடம் கூறினேன் பாரி வள்ளல் பற்றி நீ அறிவாயா! என்றேன்.அவனிடம் சென்று யாசித்துக் கேட்டால் ஒரு ஊரையும் உனக்கு தந்து விடுவான் ஆனால் நீ அவனிடம் நேருக்கு நேர் சென்று போர் செய்தல் அரிது என்று புலவர் கபிலர் கூறுவது உண்டு.மானமும் அறிவும் தமிழர்களுக்கு உரியது என்று கூறினேன் அல்லவா அறிவுகளில் இரண்டு வகை உண்டு ஒன்று நாம் எப்படி முன்னேறுவது என்று நம் பலத்தை அதிகரித்து கொண்டே செல்வது.மற்றொன்று அடுத்தவர்களை முன்னேறவிடாமல் ஒரு இனத்தை முன்னேற விடாமல் செய்வது  என்று இரண்டு வகை உண்டு.அன்று தமிழன் தனக்கென இருந்த ஐவகை நிலங்களுக்கு ஏற்றவாறு வாழ்ந்து வந்தான் .பின்பு மன்னர் ஆட்சி வந்தது அப்போதும் தமிழ் மன்னர்கள் நேருக்கு நேர் செல்வது ,புறம் காட்டினால் வடக்கிலிருந்து உயிர் துறப்பது,போர் செய்யும் போது அந்த ஊரில் உள்ள குழந்தைகள் ,பசு,பெண்டிர்,அந்தணர் என்று நால்வகையினரை அகற்றி விட்டு போர் செய்தான்.தமிழர்களுக்கு நான் கூறிய கெட்ட அறிவு கிடையாது.

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out