தமிழன்பு

தமிழன்பு
எனது வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி

பெரியார்

பெரியார்

பெரியார்

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு click here
எனது வலைத்தளங்களை கீழே கொடுத்துள்ளேன் .வலைத்தளங்களைப் பார்க்க கிளிக் செய்யவும்

உறுப்பினர்கள்

December 30, 2011

GK

1. The largest museum in the world is the American Museum of Natural History.
2. The lowest mountain range in the world is the Buena Bhaile.
3. The country known as the Land of Cakes is Scotland.
4. The place known as the Garden of England is Kent.
5. The tallest tower in the world is the C. N. Tower, Toronto, Canada.
6. The country famous for its fish catch is Japan.
7. The old name of Taiwan was Formosa.
8. Montreal is situated on the bank of River Ottawa.

Welcome ( வருக)

October 26, 2011

"கைத்தொலைபேசி பயன்பாட்டால் மூளைப் புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கவில்லை"

"கைத்தொலைபேசி பயன்பாட்டால் மூளைப் புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கவில்லை"
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 அக்டோபர், 2011 - 11:33 ஜிஎம்டி




கைத்தொலைபேசி பயன்பாடு பெருமளவில் அதிகரித்துவருகிறது.

கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவதன் மூலம் மூளை புற்றுநோய் ( பிரெய்ன் கேன்சர்) வர வாய்ப்பில்லை என்று இது குறித்து நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

June 13, 2011

ஞாபகமறதிப் பிரச்சினையால் அவதிப்பட்டு வரும் மாணவ, மாணவிகளே !

படிக்கும் மாணவ, மாணவிகளில் பலரும் ஞாபகமறதிப் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். விழுந்து விழுந்து படித்தும், தேர்வில் எல்லாம் மறந்துபோய்விடுகிறதே என்று வேதனைப்படுகிறார்கள்.



ஞாபகமறதிப் பிரச்சினையிலிருந்து விடுபட, மாணவர்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் பார்க்கலாம்…

குழந்தைகள் அழுவது ஏன்?

இந்த
தகவலை
வாசிக்கும் ஒவ்வொருவரின் பார்வையிலும், இன்றோ அல்லது நேற்றோ பிறந்த
குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம்
பார்த்திருக்கலாம்.

விஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞர்கள் ஆகியோரில் சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்கள்.

விஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞர்கள் ஆகியோரில்
சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்கள்.



1) தாமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே
மாதங்கள் தான்.


June 12, 2011

பயனுள்ள நச் வரிகள்

தவறுகளுக்கு வருத்தம் தெரிவியுங்கள்
விமர்சனங்களை விரும்புங்கள்
வீண் சந்தேகங்களை விடுங்கள்
இளைங்கர்களுக்கு ஊக்கம் கொடுங்கள்

நன்றி:மரபின்மைந்தன் ம.முத்தையா(ஒரு கப் உற்சாகம் என்னும் நூலில் இருந்து எடுக்கப் பட்டது)

June 7, 2011






பிள்ளைகளில் பாகுபாடு(உண்மைச் சம்பவம்)


21ம் நூற்றாண்டில் ஆணும பெண்ணும்
சமம் என்னும் வேளையில், இன்னும்
ஒரு சிலர் ஆணுக்கு ஒரு நோய் என்னும்
போர்வையில் பெண்ணை ஏசுகிறார்கள்.

உதாரணமாக,
அப்பா கடைக்குச் செல்கின்றார், பெண்ணோ
அப்பாவுடன் செல்லும் ஆசையில்
நானும் வருகிறேன் என்கிறாள்.ஆணோ
அடம்பிடித்து கீழே விழுகிறான். ஆனால்,
பழி பெண்மேல் அந்த பெண்ணோ அழுகிறாள்,
ஆணும் அழுகிறான்.ஆனால் ஆணுக்கு மரியாதை
பெண்ணுக்கோ ஓர வஞ்சனை.அய்யகோ!இன்னும்
எத்தனை நூற்றாண்டிற்கு தொடரப்போகின்றதோ?
இந்த அவலம்.

விழித்திரு பெண்ணே! விழித்திரு!
உனக்கு குழந்தைகள் இருக்கும்
காலத்திலாவது இரண்டு குழந்தைகளையும்
சமமாக நடத்தி வளமாக வாழ்வாயாக!

-சொ.நே.அனபுமணி

May 21, 2011

ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய படம்
நில், உட்கார், செல் - அதிகாரமற்ற பிரதமர் பதவி!
சூர்யா - 22 February, 2011


பிரதமர் என்றால் யார்? அவருக்கு எவ்வளவு அதிகாரங்கள் உண்டு என்பன போன்ற கேள்விகளை கடந்த 7 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளிடம் கேட்கப்பட்டால் தெளிவாக சொல்லிவிடுவார்கள். அந்த வாய்பேச முடியாத ஊமைத் தாத்தாவை வெளிநாடுகளுக்கு கூட்டிச் சென்று அங்குள்ள சிறப்பான மருத்துவர்கள் மூலம் சிகிச்சை கொடுத்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். அவருக்கு பேச்சு வர மாங்காடு அம்மன் கோயிலில் நெய்விளக்கு ஏற்றி வெள்ளிக்கிழமை தோறும் என் அம்மாவுடன் சென்று வழிபாடு செய்கிறேன் என்று மனம் நோகக் கூறுவார்கள்.

storm in saturn

ScienceDaily (May 19, 2011) — The atmosphere of the planet Saturn normally appears placid and calm. But about once per Saturn year (about thirty Earth years), as spring comes to the northern hemisphere of the giant planet, something stirs deep below the clouds that leads to a dramatic planet-wide disturbance.

வாழ்வை தொலைத்தவர்கள்

வாழ்வை தொலைத்தவர்கள்

சுஜா தாமு
திரைகடல் ஓடி திரவியம் சேர்த்தாலும்
போதுமென்ற மனதுடன்
சந்தோஷமாய் வாழ்ந்தனர் அன்று
வலைகடலில் மூழ்கி
இறுதி காலம் வரை திரவியம்
தேடுகின்றனர் இன்று......
காலம் நேரம் பாராமல்
கணினி முன் பணிபுரிகின்றனர்
வீட்டுகடனுக்கும் வாகனகடனுக்கும்
பிள்ளைகளின் கல்விக்கும்
ஆடம்பர தேவைகளுக்கும்
தன் வாழ்வை அடமானம் வைக்கின்றனர்.....
அன்பு, பாசம், நேசமென்றால்
தேவையில்லாத பேச்சு என்கின்றனர்
கணினியில் உழன்று உழன்று
இயந்திரமாய் மாறி போனவர்கள்
சொத்துக்கள் சேர்கின்றன
பிள்ளைகள் வளர்ந்து தன்வழியே போகின்றனர்....
பணத்தின் பின்னே போனவர்கள்
தன்னந்தனியே வாழ்கின்றனர்
வங்கியின் இருப்பை கொண்டு
வைத்தியர்களின் துணையோடு
இழந்த வாழ்வை எண்ணி கொண்டு.

May 12, 2011

மனிதன் மனிதனாக வாழ 18 விஷயங்கள்

வணங்க வேண்டிய தெய்வம் -தாய் ,தந்தை
மிக மிக நல்ல நாள் -365 நாள்களும்
மிகப் பெரிய வெகுமதி -மன்னிப்பு
மிகவும் வேண்டியது -பணிவு
மிகவும் வேண்டாதது -வெறுப்பு
மிகப் பெரிய தேவை -நம்பிக்கை
மிகக் கொடிய நோய் -பேராசை
மிகவும் சுலபமானது -குற்றம் காணல்
கீழ்த்தரமான விஷயம் -பொறாமை
நம்பக்கூடாதது -வதந்தி
ஆபத்தை விளைவிப்பது -அதிக பேச்சு
செய்யக்கூடாதது -நம்பிக்கைத் துரோகம்
செய்யக்கூடியது -உதவி
விலக்க வேண்டியது -சோம்பேறித்தனம்
உயர்வுக்கு வழி -உழைப்பு
நழுவ விடாதது -வாய்ப்பு
பிரியக்கூடியது -நட்பு
மறக்கக்கூடாதது-நன்றி

May 6, 2011

பெண் விடுதலை

பெண் விடுதலை

சுஜா தாமு
அதிகாலை எழுந்து
வீட்டு வேலைகளை முடித்து
பிள்ளைகளையும் கணவரையும்
கவனித்து அனுப்பி
மாமியாருக்கும் மாமனாருக்கும்
சமைத்து வைத்து
அலுவலகம் சென்று
நாள் முழுவதும் உழைத்து களைத்து
வீடு திரும்பியதும்
மாமியாரின் குத்தல் பேச்சுகளுக்கு
மறுமொழி கூறாமல் மௌனித்து
மாமனாரின் அதிகாரங்களுக்கு
அடிபணிந்து அடங்கி
கணவரிடம் வேண்டி கெஞ்சி
அனுமதி பெற்று
சமைத்து முடித்து கிளம்பி போகிறாள்
மகளிர் தின பட்டிமன்றத்தில்
மேடை ஏறி பெண் விடுதலை
பற்றி முழக்கமிட........

May 5, 2011

மதம்

மதம்

வித்யாசாகர்
மனிதன் -
தன் தலைமேல் இட்டுக் கொண்ட
முதல் தீ - மதம்!
அணுகுண்டு
வீசாமல் வெடிக்கும்
மனிதக் கொல்லி - மதம்!
கடவுளை காட்ட புறப்பட்டு
கொலை கொள்ளை கற்பழிப்பை கூட
தனக்குள் திணித்துக் கொண்ட சமயோசிதி - மதம்!
மனிதனை மனிதனாகவும்
மிருகமாகவும் -
வளர்க்கும் சக்தி - மதம்!
இறைவனை சென்றடைய
மனிதன் போட்டுக் கொண்ட
நெட்டை பாதை - மதம்!
காலம் திரித்த கயிறுகளில்
சரியும் சதியுமாய் -
முடைந்துப் போன விதி - மதம்!
வெறித் தனம் கொண்ட
மனிதர்களின் -
"தான்" னின் முழு அடையாளம் - மதம்!
மக்களை ஏமாற்றும்
வித்தை புரிந்த சாமியார்களுக்கு
உருவமற்று இயங்கும் ஆயுதம் - மதம்!
நல்லதை பேசி
கெட்டதை திருத்தியும் -
சில கெட்டதை விட்டெறியாததால்
மனிதனுக்குள்ளே மனிதன் கிழித்துக் கொண்ட
பிரிவுக் கோர் மூட எல்லை - மதம்!
மனிதன் -
தன்னை உணரும் முன்னே
"இவன்" என்று முழங்கிக் கொண்ட
மதம் - மதம்!!

March 16, 2011

see mercury at sunset

See Mercury at Sunset

March 14, 2011: The timing couldn't be better. Just as NASA's MESSENGER probe is about to enter orbit around Mercury, the innermost planet is popping out of the twilight for its best apparition of 2011.

The show begins on March 14th. At the end of the day, go outside and look west into the sunset. A bright star catches your eye—that's Jupiter. Just below it lies Mercury, a little dimmer than the giant planet, but easy to find with Jupiter's guidance.

See Mercury at Sunset (Pete Lawrence, 550px)
Jupiter (left) and Mercury (right) photographed at sunset on March 13, 2011, by Pete Lawrence of Selsey, UK. [larger image]

Over the next few evenings, these two planets will "pass in the night," switching places so that Mercury is on top and Jupiter on the bottom. The higher Mercury rises, the easier it is to see. By the evening of March 17th, the innermost planet should be well above any distant trees or buildings—in prime position for the big event.

March 17th is the night MESSENGER goes into orbit.

This has been a long time coming. MESSENGER was launched in Aug. 2004. Since then it has looped around the sun 15 times, flown by three planets for multiple gravity assists, and traveled some 5 billion miles. If getting there sounds tricky, that's because it is. Mercury races around the sun faster than 100,000 mph, making it difficult to catch. Moreover, a spacecraft at Mercury has to endure terrific heat and dangerous solar flares. In the whole history of the space age, only two ships have dared fly by the planet—Mariner 10 in 1974-75 and MESSENGER itself in 2008-2009.

See Mercury at Sunset (skymaps, 550px)
Mercury at sunset. Sky maps used with permission of Sky and Telescope.

Deep mysteries await MESSENGER when it arrives. There are hints that Mercury has been shrinking—how is that possible? The poles of Mercury contain some highly reflective material—could it be ice? What shapes Mercury’s long comet-like tail? What makes Mercury so dense? Are any of Mercury’s volcanic craters "fresh"? MESSENGER is bristling with instruments specifically designed to answer these questions and many others.

A 15-minute engine burn on March 17th at 8:45 p.m. EDT will place MESSENGER into orbit. At that historic moment, Mercury will be visible to the naked eye across much of the USA. Go out and look. Only MESSENGER will have a better view…

March 2, 2011



நமது பால்வீதியில் 54 கோள்களில் உயிர்கள் 

இருக்கலாம்

27FEB
தினமும் காலையில் வந்துவிட்டு மாலையில் சென்றுவிடுகிற நமது சூரியன் போல சின்னதும் பெரியதுமாய் ஒரு லட்சம் கோடி முதல் 4 லட்சம் கோடி நட்சத் திரங்கள் கொண்ட பிரமாண்ட ஏரியா ‘பால்வழித் திரள்’ (கேலக்சி) எனப்படுகிறது.

February 15, 2011

சனி கிரகத்தின் நிலவில் தண்ணீர்


சனி கிரகத்தின் நிலவில் தண்ணீர் ஐஸ்கட்டியாக உள்ளது .
-நாசா


மேலும் விவரங்களுக்குhttp://www.dinakaran.com/worlddetail.aspx?id=29389&id1=7

February 12, 2011

இருப்பதற்கு வாய்ப்பே இல்லை ! எது கடவுள் தானுங்க !!



இருப்பதற்கு வாய்ப்பே இல்லை ! எது கடவுள் தானுங்க !!
ஆத்திகமும், நாத்திகமும் ஒன்றுக்கொன்று நேர் முரணானவை. இவைகளுக்கிடையே சமரசம் கிடையாது; இருக்க முடியாது. ஆத்திகம் வெறிபிடித்து கூத்தாடத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், ஆத்திகத்தின் அடித்தளத்தை விஞ்ஞான அறிவு கொண்டு, விஞ்ஞான ஆய்வு முறை கொண்டு தகர்த்தெறிய வேண்டும். இது ஒவ்வொரு முற்போக்காளனின் கடமை என்பதை மறப்பதற்கில்லை.

இதற்கு கீழே உள்ள உரையாடலை ஓரளவு உதவலாம். இன்றைய வளர்ந்துவிட்ட விஞ்ஞானத்தின் ஆதாரங்களையும் கணக்கிலெடுத்துக் கொள்ளுங்கள்.

நாத்திகர்: உயிரினங்களே இல்லாத ஒரு காலம் இருந்தது என்பது தெரியுமா?

ஆத்திகர் : தெரியும். பூமி என்ற கோளம் உயிரினங்கள் தோன்றி வளர்வதற்கு லாயக்கான நிலை அடையவே கோடி வருடங்கள் பிடித்தன என்று விஞ்ஞானிகள் உரைக்கின்றனர்.

நா:ஆக, உயிரினங்களே இல்லாத காலத்தில் பூமி இருந்ததல்லவா?

ஆ: இருந்தது.

நா: அக்காலத்தில் - உயிரனங்களே இல்லாத காலத்தில் - பூமி இருந்தது. ஆனால் எண்ணம், சிந்தனை இருந்திருக்க முடியுமா?

ஆ: இருந்திருக்காது.

நா: ஆகவே பிரபஞ்சமும் , அதன் பகுதியாக பல கோளங்களும் வெட்ட வெளியில் சுழன்று கொண்டு இருந்தன. அதாவது பொருள் அல்லது வஸ்து இருந்தது. சிந்தனை இருக்கவில்லை.... என்ன முழிக்கிறாயே... சரிதானா?

ஆ: இது சரியாகத்தான் படுகிறது.

நா: ஆகவே , பொருள்தான் முதலில் இருந்தது. அடிப்படையானது, பின்னால் ஒரு கட்டத்தில் பொருளுக்குள் ஏற்பட்ட மாற்றங்களினால் உயிர் என்ற குணத்தைப் பொருள் அடைந்தது. அந்த உயிர்ப்பொருள் எத்தனையோவித மாற்றங்களடைந்தது. அந்த மனிதனின் சிந்தனை,எண்ணம் என்பது பிந்தியது என்பதில் சந்தேகம் கொள்ள இடமுண்டோ?

ஆ: இல்லை.

நா: யோசித்துப் பார். பூதத் சாத்திரத்தை, வான சாத்திரத்தை,பிராணி சாத்திரத்தை, அதன் ஒரு பகுதியான பரிணாம சாத்திரத்தை ...ஏன் இன்று வளர்ந்துள்ள எல்லா சாத்திரங்களையும் மறுத்து ஒதுக்கித் தள்ளினால்தான் இந்தக் கூற்றைத் தள்ள முடியும்.

ஆ: அது வாஸ்தவம்தான். பொருள் முந்தியது, சிந்தனை பிந்தியது என்பது மறுக்க முடியாத விஞ்ஞான உண்மைதான்.

நா: சரி வேறு ஒரு கோணத்திலிருந்து இவ்விஷயத்தை ஆராய்வோம். பொருள் அல்லது வஸ்து அழிவடைகிறதா?

ஆ: இது என்ன? ஒன்றும் புரியவில்லையே?

நா: கல் என்ற பொருள் எடுத்துக் கொள்வோம். அதைச் சுக்கு நூறாக உடைத்து மாவு போன்ற பொடியாக்கலாம், கல் என்ற உருவம் போய் விடுகிறது. இல்லையா?

ஆ: ஆம்; பொடியாகப் போய்விடுகிறது.

நா: 'கல்' அழிந்து விட்டது. என்று சொல்லலாமா?

ஆ: சொல்லலாம்.

நா: சொல்லக்கூடாது ! கல் என்ற உருவம் தான் அழிந்தது.'பொடி' என்ற உருவம் வந்துள்ளது. கல்லுக்குள் இருந்த அணுக்கள் அழியவில்லை. "பொருளின் உருவம்" தான் மாறிற்று.

ஆ: அது மெய்தான்.

நா: அதே போல 'ஐஸ்' என்ற பொருளைப் பார்ப்போம். கையில் எடுத்துப் பார்ப்பதற்கு முன் கசிந்து உருகி நீராக ஓடி விடுகிறது.

ஆ: 'ஐஸ்' என்ற உருவத்தை விட்டு 'நீர்' என்ற உருவத்தை அடைகிறது.

நா: அந்த நீரை ஒரு பாத்திரத்தில் வைத்து அடுப்பின் மீது வைத்தால் என்ன ஆகிறது?

ஆ: சூடு ஏறிய பின் ஆவியாக மாறிக் காற்றில் கலந்து விடுகிறது.

நா: நீர் என்ற உருவம் மாறி 'ஆவி' என்ற உருவத்தை அடைகிறது. அந்த ஆவியும் குவியலாக பாத்திரத்திலிருந்து வெளிக்கிளம்பும் பொழுது கன்ணுக்குத் தெரிகிறது. ஆனால் காற்றிலே கலந்தபின் கண்ணுக்கும் தெரிவதில்லை.

ஆ: ஆம்.

நா: ஆனால் நீரில் இருந்த அணுக்கள் அழிந்துவிட்டனவா?

ஆ: இல்லை.ஐஸ் நீராக மாறிய பொழுது ஐஸில் இருந்த அணுக்கள் அழியவில்லை. அதேபோல நீர் ஆவியாக மாறிய பொழுது நீரில் இருந்த அணுக்களும் அழியவில்லை. திடமாயிருந்த பொருள், திரவமாக மாறி , பின் ஆவியாக மாறிற்று. ஆனால் அழியவில்லை.

நா: அதே போல பிரபஞ்சத்தில் உள்ள எந்தப் பொருளும் வஸ்துவும் - கல்லோ , மண்ணோ, கட்டையோ, மரமோ,உயிருள்ளதோ, உயிரற்றதோ - எந்த நிலையிலும் அழிவதில்லை. நிலைமைக்குத் தகுந்த உருவமாற்றம் ஏற்படுகிறது.; அழிவதில்லை - இது சரிதானே?

ஆ: சரிதான்.

நா: இதைத்தான் பொருளின் அழியாத்தன்மை (Law of Conservation of Matter) என்று கூறுகின்றனர். பொருள் அழிவதேயில்லை என்றால், என்றென்றும் இருந்தது என்று அர்த்தம் அது சரி தானே?

ஆ: ஆம், அப்படித்தான் அர்த்தம்.

நா: அதாவது, பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள் அனைத்தும் இல்லாதிருந்த காலமே இல்லை என்பது இதன் தர்க்கரீதியான முடிவு.
ஆ: ஆம் என்றென்றும் இருந்து வந்துள்ளன என்பதே முடிவு.

நா: அப்படியானால் சிருஷ்டி, அல்லது படைப்பு என்பதற்கு இடமேது?

ஆ: ம்.....ம்... இல்லைதான்

நா: ஆக படைப்பும் இல்லை; படைத்தவனும் இல்லை - கடவுள் இல்லை - என்பது மறுக்க முடியாத விஞ்ஞான சாத்தியம்.

ஆ: அப்படித்தான்.... இருந்தாலும் என்னமோ மனதில் சங்கடம் ஏற்படுகின்றதே?

நா: இவ்வளவுக்குப் பின்னால் சங்கடமாயிருக்கிறது என்கிறாயே? - ஒரே வார்த்தையில் சொல்லியிருந்தால் (கடவுள் இல்லை என்று) எப்படியிருந்திருக்கும்; கோபப்பட்டிருப்பாய்;ஆத்திரப்பட்டிருப்பாய்; அறிவு ரீதியான ஆய்வுக்கு முனையமாட்டாய். ஒரு வேளை வெறிபிடித்த ஆத்திகனாகக்கூட மாறியிருப்பாய் ! இப்போது இம் முடிவு விஞ்ஞான ரீதியாக மெய்ப்பிக்கப்படுகிறது என்று ஏற்றுக் கொண்டு விட்டாய்.... இன்னும் சில நாட்கள் ஆகிவிட்டால் மனதுக்கும் சங்கடமிருக்காது. போய் வா!

(ஏ. பாலசுப்ரமண்யம் அவர்கள் எழுதிய "கடவுள் உண்டா இல்லையா?" என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது)

February 6, 2011

ஐயோ பாவம் ! மாணவன்


ஐயோ பாவம் ! மாணவன்

வாசிக்கவும் தெரியாமல்
வகுக்கவும் தெரியாமல்
ஆங்கிலமும் தெரியாமல்
தமிழும் தெரியாமல்
டை மட்டும்
கட்டத் தெரிந்து
பக்கத்து தெருவில்
இருக்கும் மெட்ரிகுலேசன்
பள்ளியில் படிக்கும்
பக்கத்து வீட்டு
எட்டாம் வகுப்பு மாணவன்

வா. நேரு

January 31, 2011

மகர ஜோதியின் மர்மம்


அய்யப்பனுக்கு கூட்டம் சேர்க்க செய்யப்படும் ஒரு செப்படி வித்தையை அம்பலப் படுத்துகிறோம்.
மல்லிகைப்பூ விற்கவும், கருவாடு விற்கவும் தான் விளம்பரம் தேவையில்லை; ஆனால் கடவுள் வியாபாரம் செய்யக் கண்டிப்பாய் விளம்பரம் வேண்டும்.விளம்பரமில்லாமல் எந்தக் கடவுளாலும் வாழ முடியாது. இது ஆண்டாண்டு கால உண்மை. தேர், திருவிழா, பூஜை, புன°காரம், விரதம், நேர்த்திக் கடன், வேண்டுதல், படையல் இவையெல்லாம் இல்லாமல் எந்தக் கடவுளாவது உண்டா? இதையெல்லாம் விட கூட்டம் சேர்க்க கூடுதலாக அற்புதம் புரிந்ததாகக் கதைகள் பரப்பப் படும். அப்படி அய்யப்பனுக்காகப் பரப்பப்பட்ட புளுகுதான் மகரஜோதி.

January 29, 2011

“பிரபஞ்ச’ ரகசியத்தை அறிய விஞ்ஞானிகள் ஆர்வம்


“பிரபஞ்ச’ ரகசியத்தை அறிய விஞ்ஞானிகள் ஆர்வம்

பூமி உள்ளிட்ட கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை பிரபஞ்சத்தில் எப்படி பிறந்தன என்பது குறித்து அறிந்து கொள்ள உலகில் உள்ள விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் அறிந்து கொண்டது மிக சிறிதளவே. எனவே, மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.

January 25, 2011

மகரஜோதி என்னும் பொய் ஜோதி



மகரஜோதி என்னும் பொய் ஜோதி




எத்தனை முறை
சொன்னாலும் ஏன்
நம்பமறுக்கிறீர்கள் !


இல்லாத ஒன்றை
விடாப்பிடியாய்
நம்பித்தொலைக்கிறீர்கள்!

அருமையான உயிர்கள்
நூற்றிஆறு
அய்யகோ என
கதறி அழ
கதறிஅழ
மிதிபட்டும் அடிபட்டும்
பறிபோயிருக்கின்றன !

நாற்பது நாட்கள்
விரதமிருந்து
அய்யப்பா ! அய்யப்பா!
என அய்யப்பனைத்
தேடிப்போனவர்கள்
சாகும்நேரத்தில்
அழைக்காமலா
இருந்திருப்பார்கள்
அய்யப்பா!அய்யப்பா என்று!

சாகும்நேரத்தில் அழைத்த
பக்தர்களைக் காப்பாற்றாமல்
எங்கே ------ போனான்
உங்கள் அய்யப்பன் என்றால்
முறைக்கிறீர்கள் என்னை !

கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தை என்று
சொன்ன களவாணிப் பயல்களை
நம்பி கால் நடையாய்ப்
போனீர்களே !

மோசடி செய்து
பணம் பறிக்கவே
கேரளஅரசும் தேவஸ்தானமும்
இணைந்து நடத்தும்
மகரஜோதி எனும்
பொய்ஜோதியை
நம்பிப் போய்
உயிரைத் தொலைத்தீர்களே
எமது உழைக்கும் மக்களே!

பட்டினிபோடு பாம்பை
வரும் பக்தர்களிடம்
சீறவிடு பாம்பை !
பாம்பைக் கடவுள் என்று சொல்!
உண்டியல் நிரம்பும் உனக்கு
என்றானாம் அரசனிடம்
சாணக்கியன் அந்நாளில் !

மின்வாரியத்து ஆளைப் பிடித்து
பொன்னம்பல மேட்டின் மேலே
தீபத்தை ஏற்று எனச்சொல்லி
கடவுள் ஏற்றும் ஜோதி
என்று பொய் பரப்பி
உண்டியலை நிரப்புகிறது
கேரள அரசாங்கம் இந்நாளில்!

உழைக்கும் மக்களின்
அரசாங்கம் பொய் சொல்லி
மக்களைக்கொன்று குவிக்குமா!
இனியாவது உண்மையைச்
சொல்லித் தொலைக்குமா?
நம்பிக்கை எனும் பெயரில்
ஓரிடத்தில் மொத்தமாய்க்
குவியும் மந்தை உணருமா!

- -----------------------------------பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா.
நேரு அவர்கள் எழுதிய கவிதை

January 24, 2011

புராணங்களும் வேதங்களும் கள் குடித்த பைத்தியக்காரனின் உளறல்களே !



இன்று தமிழர் சமுதாயம்தான் உலகிலேயே காட்டுமிராண்டி வாழ்வு வாழ்ந்து வருகிற சமுதாயமாக இருக்கிறது. உலகிலுள்ள 280 கோடி மக்களில் யாரும் இவ்வளவு பிறவி இழிவான நிலையில் முட்டாள்தனமாக வாழ்பவர்களில்லை. நமது நாட்டைப் பிடித்துள்ள ‘நோய்கள்’ மூன்று. அவை : 1. கடவுள், மதம், சாஸ்திரங்கள் 2. சாதி 3. ஜனநாயகம் என்பன. நம்மை அரித்துவரும் நோய்கள்: 1. பார்ப்பான் 2. பத்திரிகைகள் 3. அரசியல் கட்சிகள் 4. தேர்தல்கள் 5. சினிமா ஆகிய இவைகள் ஒழிக்கப்பட்டாலொழிய நமது வாழ்வு சீர்படாது என்று, நான் இங்கு மட்டுமல்ல வடநாட்டிலும், கன்னட, கேரள மாநிலங்களிலும் லட்சக்கணக்கான பொது மக்கள் கூடிய கூட்டங்களில் ஆண்டுக்கணக்காக எடுத்துரைத்து வந்திருக்கிறேன்.

January 14, 2011

கடவுளை நம்பும் முட்டாள்களே


கடவுளை நம்பும் முட்டாள்களே!
கடவுள்களை நம்பும் முட்டாள்களே!
அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்;
அவரே உலகைப் படைத்து காத்து நடத்தி வருகிறார்;
அவரன்றி ஒரு அணுவும் அசையாது;
அவரே உலக நடப்புக்குக் காரணஸ்தர் ஆவார்
என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே!
கடவுளால் உலகத்திற்கு, மனித சமூதாயத்திற்கு, ஜீவ கோடிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?

தொடர்புடைய பதிவுகள்

back to top

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out